Pages

Loading...

LIKE

Sunday, August 25, 2013

விண்டோஸ் 8 அப்டேட்

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே விண்டோஸ் 8 மென்பொருளை வெளியிட்டது மைக்ரோசாப்ட் நிறுவனம். டேப்லெட், ஸ்மார்ட் போன் என்று கணினி மயமாகி கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் இந்த விண்டோஸ் 8 மென்பொருளை கணினிகள் மட்டுமின்றி டேப்லெட் கணினிகளிலும் உபயோகிக்குமாறு அமைத்துள்ளது இதன் சிறப்பு. உலவிகளில் உபயோகிப்பதை போல விண்டோஸ் 8 கணினிகளில் Apps களை உபயோகிக்கலாம் மற்றும் தொடுதிரை(Touch Screen) வசதியும் உள்ளது.


விண்டோஸ் 8 மூன்று விதமான விலைகளில் கிடைக்கிறது. நீங்கள் 2 June 2012 இருந்து 31 January 2013 இடைப்பட்ட நாட்களில் விண்டோஸ் 7 கணினி வாங்கி இருந்தால் கணினியை ரூபாய். 699 செலுத்தி குறைந்த விலையில் விண்டோஸ் 8 க்கு அப்டேட் செய்து கொள்ளலாம். இடைப்பட்ட நாட்களில் கணினி வாங்க வில்லை எனில் ஆன்லைனில் விண்டோஸ் 8 மென்பொருளை டவுன்லோட் செய்ய ரூபாய் 1,999 செலுத்த வேண்டும். அல்லது DVD யாக பெற விரும்பினால் $69.95 செலுத்தி விண்டோஸ் 8 மென்பொருளை பெற்று கொள்ளலாம்.

அப்டேட் செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
  • உங்கள் கணினியை விண்டோஸ் 8 இயங்கு தளத்திற்கு மாற்றி விட்டால் மறுபடியும் பழைய விண்டோஸ் வெர்சனை உபயோகிக்க முடியாது. உபயோகிக்க எண்ணினால் மறுபடியும் பழைய விண்டோஸ் வெர்சனை இன்ஸ்டால் செய்தாக வேண்டும். 
  • விண்டோஸ் 7 கணினியில் இருந்து விண்டோஸ் 8 க்கு அப்டேட் செய்தால் உங்கள் கணினியில் உள்ள மென்பொருட்கள் மற்றும் ஆவணங்கள் போன்றவை எதுவும் அழியாது. ஆனால் மற்ற விண்டோஸ் வெர்சன்களில்(XP, Vista) இருந்து அப்டேட் செய்தால் உங்களின் பழைய பைல்கள் அப்படியே இருக்கும். ஆனால் மென்பொருட்களை மறுபடியும் இன்ஸ்டால் செய்தாக வேண்டும். 
  • அப்டேட் செய்வதற்கு முன் விண்டோஸ் 8 மென்பொருளை நிறுவ உங்கள் கணினியில் வசதிகள் உள்ளனவா என இந்த லிங்கில் System Requirements to install Windows 8 சென்று சரிபார்த்து கொள்ளுங்கள்.

அப்டேட் செய்வது எப்படி:
  • விண்டோஸ் 8 மென்பொருளை வாங்குவதற்கு முன் இந்த லிங்கில் சென்று Windows Upgrade Assistant என்ற மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணியில் இயக்கவும். .
  • இந்த மென்பொருள் உங்கள் கணினியை ஆராய்ந்து உங்கள் கணினி விண்டோஸ் 8 மென்பொருளுக்கு அப்டேட் செய்ய ஏற்றதா இல்லையா என கண்டறிந்து சில தீர்வுகளை வழங்கும். 
  • ஒருவேளை உங்கள் கணினி விண்டோஸ் 8 மென்பொருளுக்கு ஏற்ற அம்சங்களை கொண்டிருந்தால் விண்டோஸ் 8 மென்பொருளின் டவுன்லோட் லிங்கும் காண்பிக்கும் அல்லது இந்த லிங்கில் Windows 8 Pro சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

இலவசமான சிறப்பான அன்ரொயிட் மென்பொருள்கள்

செல்லினம்


உங்கள் அன்ரொயிட் மென்பொருளில் தமிழில் தட்டச்சிடுவதற்கு செல்லினத்தை விட வேறு மென்பொருள் ஏதும் தேவையில்லை. உங்கள் குறுஞ்செய்திகள் தொடக்கம் வேஸ்புக்கில் ஏதாவது தமிழில் எழுதவேண்டும் என்றாலும் செல்லினம் ஒன்றே போதும்.

sellinam

Viber


இலவசமாக தொலைபேசி அழைப்புக்களை எடுக்கவும், குறுஞ்செய்திகளை அனுப்பவும் பயன்படும் மென்பொருள் இது. (அனேகமான இயங்குதளங்களுக்கு கிடைக்கும் மென்பொருள் இது.)

viber

Flipboard


உலகச் செய்திகளை ஒரே இடத்தில் படிக்க அழகான வடிவமைப்புடன் உடைய மென்பொருள் இது.

flipboard

CamScanner


உங்களிடம் ஒரு ஒளிவருடி இல்லையா? கவலையை விடுங்கள். இந்த மென்பொருள் உங்கள் கைப்பேசியை ஒரு சிறந்த ஒளிவருடியாக மாற்றிவிடும்.

camScanner

Google Earth


இது நீங்கள் முன்னரே கேள்விப்பட் ஒன்றாகத்தான இருக்கும். இந்த பூமியை உங்கள் கைப்பேசியிலிருந்தே சுற்றிப் பார்த்திடலாம் இந்த மென்பொருளை பயன்படுத்தி.

google-earth



Wednesday, June 5, 2013

ANDROID சாதனங்களுக்காக புதிய வசதிகளுடன் அறிமுகமாகியது Gmail அப்பிளிக்கேஷன்

அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படும் சாதனங்களுக்காக புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட Gmail அப்பிளிக்கேஷனை வெளியிட்டது கூகுள் நிறுவனம்.
இப்புதிய பதிப்பில் புதிய இன்பாக்ஸ் வடிவமைப்பை அறிமுகப்படுத்திய கூகுள் இணைய இணைப்பு அற்ற நேரங்களிலும் விரைவாக மின்னஞ்சல்களை தேடிக்கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது.
இது தவிர மேலும் சில மாற்றங்கள் உட்பட முன்னைய பதிப்பில் காணப்பட்ட வழுக்கள் சரிசெய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதனை Google Play தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

தரவிறக்கச் சுட்டி

FixWin - கணினி பிரச்னைகளை சரி செய்ய உதவும் மென்பொருள்

நண்பர்கள் விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7, விண்டோஸ் எக்ஸ்பி என அனைத்து இயங்குதளங்ளையும் பயன்படுத்தியிருப்பீர்கள்..! இவற்றில் இணைய இணைப்பு பெற்றிருக்கும் கணினிகள் அடிக்கடி சந்திக்கும் பிரச்னை வைரஸ், மால்வேர், ஸ்பைவேர் (Virus, Malware, Spyware).

கணினியில் ஏற்படும் பொதுவான சில பிரச்னைகள்:
1. Windows Explorer
2. Internet Connection Problem
3. Media Player
4. Explorer.exe Problem
5. Recycle Bin,
6. Disk Drive Problem
7. Auto Run Problem


கூடவே சில செட்டிங்ஸ்(Settings Problems) பிரச்னைகளும் வரும். இதுபோன்று 50 வகையான பிரச்னைகளை மற்றவர்கள் துணையின்றி நாமே சரி செய்ய முடியும்.

ஆச்சர்யமாக இருக்கிறதா?

ஆம் நண்பர்களே.. இதுபோன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரச்னைகளை சரிசெய்ய பயன்படுகிறது இச்சிறிய மென்பொருள். இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து பயன்படுத்திப்பாருங்கள்.. சிறிய சிறிய பிரச்னைகளைத் தீர்க்க நீங்கள் மற்றவர்களைத் தேட வேண்டிய அவசியமில்லாமல் செய்கிறது இம்மென்பொருள்...


இயங்குதளம்: விண்டோஸ் XP / விஸ்டா / 7
Saturday, November 17, 2012

கணினியில் அழித்த பைல்களை மீண்டும் பெற முடியுமா?



பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாட்டில், நாம் அழித்த பைல்களை எளிதாக மீட்டுப் பெற்று விடலாம் என்று அனைவரும் எண்ணுகிறோம். ஒரு சிலர், அனைத்தையும் பெற முடியாது என்று கூறுகின்றனர். ஆனால், அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் ஒத்துக் கொள்வதாய் இல்லை. இது குறித்து நிலவும் சந்தேகங்களையும், அவை சரியானவை தானா என்பதனையும் இங்கு காணலாம். 

1. அழித்த பைல் அனைத்தையும் ரீசைக்கிள் பின் கொள்ளும்:

விண்டோஸ் இயக்கத்தில், ரீசைக்கிள் பின் என்னும் மீட்புத் தொட்டி, நமக்கு உதவிடும் நண்பனாக இருக்கிறது. நாம் அழித்த பைல்களைத் தாங்கிக் கொண்டு, மீண்டும் அவற்றை மீட்டு எடுக்க உதவுகிறது. அழித்த பைல் எல்லாம் இதில் சென்று தங்குமா? என்ற கேள்விக்கு ஆம் என்று பதில் கூற இயலாது. அனைத்து பைல் வகைகளையும் ரீ சைக்கிள் பின் கொள்ளாது. நீங்கள் மிகப் பெரிய பைல் அல்லது போல்டரை அழிக்க முற்படுகையில், இதனை ரீ சைக்கிள் பின் கொள்ளாது என்ற செய்தி உங்களுக்குக் காட்டப்படும். மிகப் பெரிய பைல் என்றால், நிச்சயம் அது அழிக்கப்பட்டால், ரீ சைக்கிள் பின்னுக்குச் செல்லாது. அதே போல, கமாண்ட் லைனிலிருந்து அழிக்கப்படும் பைல்கள் ரீ சைக்கிள் பின்னுக்குச் செல்லாது. ரிமோட் கண்ட்ரோல் மூலம் அழிக்கப்படும் பைல்களும் இங்கு செல்லாது. 

2. அப்ளிகேஷன்கள் பைல்களை அழிக்கும் முன் கேட்காது:

அப்ளிகேஷன் புரோகிராம்கள் அப்டேட் செய்கையில், பழைய பைல்களை மேம்படுத்திக் கொள்ளும். இவற்றை மேம்படுத்துவதனால், பழைய பைல் அழிக்கப்படுகிறது, அழிக்கவா? என்றெல்லாம் நம்மிடம் ஆப்ஷன் கேட்காது. இவ்வாறு அழிக்கப்படும் பைல்களுக்கும் ரீ சைக்கிள் பின் அடைக்கலம் கொடுக்காது.

3. பேக் அப் செயல்முறை அழிக்கும் பழைய பைல்கள்:

அவ்வப்போது நம் பைல்களை பேக் அப் எடுப்பது ஒரு நல்ல பழக்கம். போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவ், பிளாஷ் ட்ரைவ், சிடிக்கள் மற்றும் மேக்னடிக் டேப் ஆகியவற்றில் பேக் அப் எடுக்கலாம். இவ்வாறு எடுக்கையில், பழைய பைல்களின் இடத்தில், அப்டேட் செய்யப்பட்ட பைல்கள் இடம் பிடிக்கின்றன. பழைய பைல்கள் எங்கே செல்கின்றன? முற்றிலுமாக அழிக்கப்படுகின்றன. நாம் விரும்பினாலும் அவை மீளக் கிடைக்காது. ரீ சைக்கிள் பின் இந்த வகையில் நமக்கு உதவாது.

4. ஆபீஸ் பைல்கள் மேம்படுத்தப்பட்டால், பழைய பார்மட்டில் மீண்டும் கிடைக்காது:

மைக்ரோசாப்ட் வழங்கும் ஆபீஸ் தொகுப்பு மிக அருமையான வசதிகளைக் கொண்ட ஒரு தொகுப்பாகும். இது அடிக்கடி மேம்படுத்தப்பட்டு நமக்குக் கிடைத்து வருகிறது. இதனால், பழைய பதிப்புகளில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்கள், புதிய பதிப்புகளில் படிக்கப்படுகையில், புதிய பார்மட்டிற்கு மாற்றப்படும். எடுத்துக் காட்டாக, ஒருவர் ஆபீஸ் 2007 தொகுப்பில், டாகுமெண்ட் ஒன்றை தயாரித்து தன் நண்பர் ஒருவருக்குக் கொடுக்கிறார். அவர் அதனைத் தன் கம்ப்யூட்டரில் ஆபீஸ் 2010 தொகுப்பில் படிக்கிறார். டாகுமெண்ட் அந்த பார்மட்டுக்கு மாறுகிறது. டாகுமெண்ட்டில் மாற்றங்களை ஏற்படுத்தி, நண்பருக்கே திருப்பி அனுப்புகிறார். அவரால், அதனை தன் ஆபீஸ் 2007 தொகுப்பில் படிக்க இயலாது. அவரிடம், அவரின் பழைய பார்மட் டாகுமெண்ட் இல்லை என்றால், அவர் டாகுமெண்ட் பைல், அழிந்ததுதான். மீண்டும் கிடைக்காது. பார்மட்டினை ஆபீஸ் 2010 மாற்றுகையில், பழைய பார்மட் கொண்ட டாகுமெண்ட் பைல், ரீ சைக்கிள் பின்னுக்குச் செல்லாது.

5. டேட்டா ரெகவரி புரோகிராம் உதவுமா?

அழிக்கப்பட்ட பைல்களில் உள்ள டேட்டாவினை மீட்டுத் தரும் பல புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவை எந்த அளவிற்கு அழித்த பைல்களை மீட்டுத் தரும்? எந்த சூழ்நிலையில் இவை இயங்கி மீட்டுத் தரும்? என்பது கேள்விக் குறியே. பெரும்பாலான நேரங்களில், இவை முழு வெற்றியைத் தருவதில்லை. முழுமையாக மீட்டுத் தருவதில்லை. 

6. பைல் அழிந்தால் அவ்வளவுதான்!:

ஒரு பைல் அழிக்கப்பட்டால், அவற்றில் உள்ள டேட்டா, அங்கேயே தங்குகிறது. முதல்  நிலையில் எது அழிக்கப்படுகிறது என்றால், அந்த டேட்டா தங்கியிருக்கும் இடம் குறித்த தகவல் தான். அந்த இடத்தில் இனி புதிய டேட்டாவினை எழுதிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப் படுகிறது. எனவே, அந்த இடத்தில் புதிய டேட்டா எழுதப்படும் வரையில், டேட்டா தங்கும். அந்நிலையில் அவற்றை மீட்கலாம். ஆனால், அந்த டேட்டா தங்கும் பிரிவுகள் ஏதேனும் சிலவற்றில் கூட புதிய டேட்டா எழுதப்பட்டால், பழைய பைல் நமக்குக் கோர்வையாகக் கிடைக்குமா என்பது சந்தேகமே. இது போன்ற அமைப்பும் நமக்கு தீங்கு விளைவிக்கலாம். ஏனென்றால், அழிக்கப்பட்ட டேட்டாவினை, நமக்கு வேண்டாதவர் கைப்பற்ற முடியும். டேட்டா அடுத்தவர் அறியக் கூடாத வகை எனில், நமக்குத் தொல்லை தான். மேலே சுட்டிக் காட்டப்பட்டவை சில நிகழ்வுகளே. ரீ சைக்கிள் பின் மற்றும் பேக் அப் போன்ற வசதிகள் எந்த அளவிற்கு நமக்கு பைல்களை மீட்க உதவுகின்றன என்று பார்த்தோம். இப்போது சில அப்ளிகேஷன் புரோகிராம்கள், பைல்கள் எந்த சூழ்நிலையில் எப்போது அழிக்கப்பட்டிருந்தாலும், அவற்றை மீட்டுத் தரும் என்று விளம்பரப்படுத்தப்படுகின்றன. இவற்றின் செயல் தன்மையைக் கண்ட பின்பே, இவை கூறும் சாத்தியக் கூறுகள் சரிதானா என்று அறியலாம்.
Thursday, November 15, 2012

Wifi இல் சில சுவாரசியம்


WiFi என்ற Wireless Fidelity இப்பொழுது பிரபலம்.802.11a,802.11b,802.11h எனப் பல வரையறைகள் இத்தொழில் நுட்பப் பயன்பாட்டில் வெளியாகியுள்ளன.802.11gஐ அடிப்படையாகக் கொண்ட வயர்லெஸ் நெட்வொர்க் கார்டுகளும்,அக்சஸ் பாயிண்டுகளும்(Access Point) கட்டுப்படியாகிற விலைகளில் கிடைப்பதால் எல்லோரும் வயர்லெஸ் நெட்வொர்க் பயன்படுத்த முனைகின்றனர்.
WIRELESS நெட்வொர்க்கில் பாதுகாப்பு அம்சம் கவனிக்கப்பட வேண்டியது.அதன் பாதுகாப்பு சரியில்லையெனில்,வேண்டாத நபர்கள் அதனுள் நுழைந்து,நாசத்தை ஏற்படுத்த முடியும்.உங்கள் நெட்வொர்க்கை பயனபடுத்தி மற்றொரு நெட்வொர்க்கை தாக்க முடியும்.

வயர்லெஸ் நெட்வொர்க்குகளை ஏற்படுத்துபவர்கள் அவற்றின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.அதற்கான சில ஆலோசனைகள் கீழே தரப்பட்டுள்ளன.

ஆன்டனாவை சரியான இடத்தில வையுங்கள்.உங்களுடைய நெட்வொர்க்கிற்கு வெளியே சிக்னல் செல்லக் கூடாது என்பதை மனதில்   வையுங்கள்.நெட்வொர்க்கிற்கு வெளியே செல்லுகிற சிக்னலை வேண்டாத நபர்கள் கைப்பற்றினால் ஆபத்து நேரிடும் என்பதை மறவாதீர்கள்.


Wireless Encryption Protocol(WEP)என்ற என்கிரிப்ஷன் முறையை உங்கள் நெட்வொர்க்கில் செயல்படுத்துவது நல்லது.அக்சஸ் பாயிண்டுகளைத் தயாரிக்கிற நிறுவனங்கள் இந்த புரோடோகோலை செயல் இழக்கச் செய்வது வழக்கம்.எனவே அதைச் செயல்பட வையுங்கள்.எனவே உங்கள் நெட்வொர்க்கில் இருந்து வெளியேறுகிற டேட்டாவை ஹேக்கர்களும்,கிராக்கர்களும் அவ்வளவு எளிதாக படித்துவிட முடியாது.

அக்சஸ் பாயிண்டுகளில் Service Set Indentifier என்ற வசதி உண்டு.ஒரு அக்சஸ் பாயிண்டானது தனது எஸ்எஸ்ஐடி பெயரை அலைபரப்பு செய்வது வழக்கம்.எனவே அந்த பெயரை தெரிந்து கொண்ட ஹேக்கர்களும்,கிராக்கர்களும் அந்த அக்சஸ் பாயிண்டில் நுழைய முயற்சி செய்வார்கள்.எனவே அக்சஸ் பாயிண்டின் SSID broadcast வசதியைத் தடை செய்து விடுங்கள். 

Dynamic Host configuration Protocol G DHCP என்ற வசதியை செயல் இழக்கச் செய்து விடுங்கள்.எனவே ஹேக்கர்களும்,கிராக்கர்களும் உங்கள் நெட்வொர்க்கில் நுழைய முயன்றால் அவர்கள் TCP/IP புரோடோகால்களுக்கு தேவையான IP முகவரி,சப்நெட் மாஸ்க்(Subnet Mask) போன்ற விவரங்களை கொடுக்க வேண்டியிருக்கும்.உங்கள் நெட்வொர்க் தொடர்பான இந்த விவரங்கள் அவர்களிடம் இல்லாததால் அவர்களால் உங்கள் நெட்வொர்க்கில் நுழைய முடியாது.TCP/IP என்றால் Transmission Control Protocol/Internet Protocol எனப் பொருள்.

Simple Network Management Protocol G SNMP என்ற செட்டிங்களை அக்சஸ் பாயிண்டில் செயல் இழக்கச் செய்யுங்கள்;அல்லது மாற்றி விடுங்கள்.இதை நீங்கள் செய்யாமல் விட்டால் உங்கள் நெட்வொர்க் பற்றிய விவரங்களை ஹேக்கர்களும்,கிராக்கர்களும் அறிந்துவிட முடியும்.

எந்தெந்த கம்ப்யூட்டர்கள் எல்லாம் அக்சஸ் பாயிண்டு வழியாக செல்ல வேண்டும் என்பதை நிர்ணயிக்கிற வசதி சில அக்சஸ் பாயிண்டுகளில் உண்டு.உங்களுடைய அக்சஸ் பாயிண்டிலும் அந்த வசதி இருந்தால்,உங்கள் நெட்வொர்க்கில் உள்ள கம்ப்யூட்டர்களின் நெட்வொர்க் கார்டு முகவரிகளை அக்சஸ் பாயிண்டிடம் தெரிவித்து விடுங்கள்.இந்த முகவரிகளைத் தவிர மற்ற முகவரிகள் கொண்ட கம்ப்யூட்டர்களை அனுமதிக்காதே என அக்சஸ் பாயிண்டிடம் கூறினால் நெட்வொர்க்கின் பாதுகாப்பு கூடுமல்லவா?

Saturday, October 27, 2012

விண்டோஸ் 8 மென்பொருள் வெளியீடு : உங்கள் கணினியில் அப்டேட் செய்வது எப்படி?



மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே விண்டோஸ் 8 மென்பொருளை வெளியிட்டது மைக்ரோசாப்ட் நிறுவனம். டேப்லெட், ஸ்மார்ட் போன் என்று கணினி மயமாகி கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் இந்த விண்டோஸ் 8 மென்பொருளை கணினிகள் மட்டுமின்றி டேப்லெட் கணினிகளிலும் உபயோகிக்குமாறு அமைத்துள்ளது இதன் சிறப்பு. உலவிகளில் உபயோகிப்பதை போல விண்டோஸ் 8 கணினிகளில் Apps களை உபயோகிக்கலாம் மற்றும் தொடுதிரை(Touch Screen) வசதியும் உள்ளது.

விண்டோஸ் 8 மூன்று விதமான விலைகளில் கிடைக்கிறது. நீங்கள் 2 June 2012 இருந்து 31 January 2013 இடைப்பட்ட நாட்களில் விண்டோஸ் 7 கணினி வாங்கி இருந்தால் கணினியை ரூபாய். 699 செலுத்தி குறைந்த விலையில் விண்டோஸ் 8 க்கு அப்டேட் செய்து கொள்ளலாம். இடைப்பட்ட நாட்களில் கணினி வாங்க வில்லை எனில் ஆன்லைனில் விண்டோஸ் 8 மென்பொருளை டவுன்லோட் செய்ய ரூபாய் 1,999 செலுத்த வேண்டும். அல்லது DVD யாக பெற விரும்பினால் $69.95 செலுத்தி விண்டோஸ் 8 மென்பொருளை பெற்று கொள்ளலாம்.

அப்டேட் செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
உங்கள் கணினியை விண்டோஸ் 8 இயங்கு தளத்திற்கு மாற்றி விட்டால் மறுபடியும் பழைய விண்டோஸ் வெர்சனை உபயோகிக்க முடியாது. உபயோகிக்க எண்ணினால் மறுபடியும் பழைய விண்டோஸ் வெர்சனை இன்ஸ்டால் செய்தாக வேண்டும். 
விண்டோஸ் 7 கணினியில் இருந்து விண்டோஸ் 8 க்கு அப்டேட் செய்தால் உங்கள் கணினியில் உள்ள மென்பொருட்கள் மற்றும் ஆவணங்கள் போன்றவை எதுவும் அழியாது. ஆனால் மற்ற விண்டோஸ் வெர்சன்களில்(XP, Vista) இருந்து அப்டேட் செய்தால் உங்களின் பழைய பைல்கள் அப்படியே இருக்கும். ஆனால் மென்பொருட்களை மறுபடியும் இன்ஸ்டால் செய்தாக வேண்டும். 
அப்டேட் செய்வதற்கு முன் விண்டோஸ் 8 மென்பொருளை நிறுவ உங்கள் கணினியில் வசதிகள் உள்ளனவா என இந்த லிங்கில் System Requirements to install Windows 8 சென்று சரிபார்த்து கொள்ளுங்கள்.

அப்டேட் செய்வது எப்படி:

விண்டோஸ் 8 மென்பொருளை வாங்குவதற்கு முன் இந்த லிங்கில் சென்று Windows Upgrade Assistant என்ற மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணியில் இயக்கவும். .

இந்த மென்பொருள் உங்கள் கணினியை ஆராய்ந்து உங்கள் கணினி விண்டோஸ் 8 மென்பொருளுக்கு அப்டேட் செய்ய ஏற்றதா இல்லையா என கண்டறிந்து சில தீர்வுகளை வழங்கும். 

ஒருவேளை உங்கள் கணினி விண்டோஸ் 8 மென்பொருளுக்கு ஏற்ற அம்சங்களை கொண்டிருந்தால் விண்டோஸ் 8 மென்பொருளின் டவுன்லோட் லிங்கும் காண்பிக்கும் அல்லது இந்த லிங்கில் Windows 8 Pro சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். 

பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். 
Friday, October 26, 2012

TeamViewer - கண்டம் விட்டு கண்டம் பாயும் மென்பொருள்


நாம் கணணியை நீண்ட காலம் பயன்படுத்தி வந்தாலும் அதில் ஏற்படும் எல்லாப் பிழைகளையும் (வன்பொருள் அல்லது மென்பொருள் [Hardware/ Software] ரீதியான) நம்மால் சீர்செய்து கொள்ள முடிவதில்லை. இவ்வாறான வேளையிலேயே நாம் மற்றவரை நாடுவதுண்டு. அதிலும் சிலருக்கு பொதுவாக பெண்களுக்கு தமது நண்பர்களாயிருந்தால்  வீட்டில் அழைத்து அப் பிரச்சனையை சரிசெய்வது என்பது சற்று கடினமானதே. அதேவேளை தெரிந்த உறவினர் இருப்பினும் வேறு நாட்டில் வசித்தால் எப்படி அப் 

பிரச்சனையை தீர்ப்பது என்று கவலைப்படுவதுமுண்டு. ஆனால் இப்போது இணைய வசதி இல்லாதவர்களின் வீடே இல்லையெனலாம். அப்படியிருக்க நமக்கேன் இவ்வாறான கவலை..? இருக்கவே இருக்கின்றது டீம் வியுவர்(TeamViewer) எனும் மென்பொருள் (TeamViewer) மூலம் ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைந்திருக்கும் உலகின் எப்பகுதியிலுமுள்ள ஒரு கணினியை உங்களது கணினி மூலம் அணுகி அதனை இயக்கலாம்.


உங்கள் கணினியின் முகப்புத்திரையை(Desktop) மறுமுனையில் இருப்பவருக்கும் அதேபோல் அவரது கணினியின் முகப்புத்திரையை(Desktop) உங்கள் கணினிலும் தோன்றச் செய்யலாம்.. இதன் மூலம் நாம் அதிக கொள்ளளவு(Capacity) கொண்ட பைல்களையோ படங்களையோ அல்லது வேறு ஏதும் செய்முறை கோப்புக்களையோ (Presentations) தொலைவிலுள்ளவருக்குக் கணப்பொழுதில் காண்பிக்கவும் பரிமாறிக் கொள்ளவும் முடியும். தொலைவிலுள்ள நண்பரைக் கொண்டு உங்கள் கணினியில் ஏற்பட்டுள்ள வன்பொருள் மற்றும் மென்பொருள் சிக்கலை அவரிடத்திற்கு நேரில் செல்லாமல் உங்கள் வீட்டிலிருந்தபடியே சரி செய்தும் கொள்ளலாம். இந்த TeamViewer ஆனது இணையத்திலிருந்து பதிவிறக்கி(Download) நிறுவிக்(Install) கொண்டபின் இலகுவாக பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக அதிகளவு கஷ்டப்படவேண்டிய தேவையில்லை. ஆனால், இம் மென்பொருளை பயன்படுத்த இரண்டு முனைகளிலும் TeamViewer நிறுவி இணையத் தொடர்பில் இருக்க வேண்டும்.

Android Application-களை தாக்கும் புத்தம் புதிய வைரஸ்


கூகுளின் Android Application Store-ஐ புதிய வைரஸ் ஒன்று தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த புதிய வைரசுக்கு Trojan Back Look out என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இது Android சாதனங்களில் உள்ள SMS, MMS, Video Files மற்றும் ST Card-களில் உள்ள கோப்புகளை திருடி Remote FD Server-க்கு அனுப்பி விடும்.

மேலும் Android சாதனங்களில் உள்ள ரகசிய செய்திகளை மிக எளிதாக கண்டுபிடித்து விடும்.

ட்ரஸ்ட்கோ என்ற மென்பொருளுக்கான பாதுகாப்பை வழங்கும் நிறுவனம் இந்த வைரைசை கண்டுபிடித்திருக்கிறது.

அவ்வாறு இந்த புதிய வைரஸ் Android சாதனங்களைத் தாக்கினால் அந்த வைரஸை நீக்க ட்ரஸ்ட்கோ வழங்கும் Look out என்ற Anti-virus Applicationகளைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Saturday, October 20, 2012

Microsoft Security Essentials – ஆன்டிவைரஸ் மென்பொருள்.


விண்டோஸ் கணினிகளை பாதுகாக்க ஏராளமான ஆன்டிவைரஸ் மென்பொருட்களும் இருக்கின்றன.

ஆனால் அவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்தே கிடைக்கின்ற இலவச ஆன்டிவைரஸ் மென்பொருளை பயன்படுத்திப் பார்க்க நினைக்கிறார்கள் அவர்களுக்கு ஏற்ற அருமையான தொகுப்பாக உள்ளது.

ஏராளமான ஆன்டிவைரஸ் மென்பொருட்கள் போன்று இதுவும் சிறப்பாக இயங்குவதாக கூறப்படுகின்றது.

சிறப்பம்சங்கள்.

  • இலகுவான வடிவமைப்பு,
  • ரியல் டைம் பாதுகாப்பு,
  • கணினியின் வேகத்தை பாதிக்காது,
  • குறைந்தளவு இடத்தை பிடித்தல்.


கணிணி பற்றிய தெரியாத தகவல்கள்


RAID - Redundant Array of Independent Disks: ஒரே டேட்டாவினை பல ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து வைக்கும் முறை. இதன் மூலம் இன்புட் மற்றும் அவுட்புட் செயல்பாடுகளை சமநிலைப்படுத்தி பகிர்ந்து இயக்கலாம். இதன் மூலம் கம்ப்யூட்டர் சிஸ்டத்தின் செயல்பாடுகள் மேன்மையடைகின்றன.
Downtime: ஹார்ட்வேர், ஆப்பரேட்டிங் சிஸ்டம் அல்லது அப்ளிகேன் 
புரோகிராம்களின் தவறினால் கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்காமல் இருக்கும் காலம்.

Backup Rotation: பேக் அப் மீடியாவின் செயல்பாடுகளில் ஒன்று. இதில் சொல்லப்படும் சுழற்சி முறையினால் அண்மைக் காலத்திய டேட்டா பேக் அப் கிடைக்கிறது. இதற்கு முன் ஏற்படுத்தப்பட்ட பேக் அப் கண்டறியப்பட்டு அதன் இடத்தில் புதிய டேட்டா பதியப்படுகிறது. இந்த செயல்பாட்டினை இச் சுழற்சி குறிக்கிறது. இதனால் பைல்கள் கரப்ட் ஆனால் அதன் டேட்டாவும் எளிதாக மீண்டும் பெறப்படுகிறது.

DES - Data Encryption Standard: மிகவும் பிரபலமான என்கிரிப்ஷன் முறை. இது 56-பிட் கீ மற்றும் பிளாக் சைபர் (Block Cypher Method) வழியினைப் பயன்படுத்தி டேட்டாவினை 64-பிட அடங்கிய தொகுப்புகளாக மாற்றுகிறது. அதன் பின் அதனை என்கிரிப்ட் செய்கிறது.

Cryptography: தொடர்புகளின் ரகசியத் தன்மையைப் பாதுகாப்பதில் இதுவும் ஒரு வழி. இந்த என்கிரிப்ஷன் முறையில் டேட்டா முற்றிலும் மாறான வழியில் அமைக்கப்படுவதாகும். புரிந்து கொள்ள முடியாத பார்மட்டில் டேட்டா பதியப்படும். இதனை மீண்டும் பெற மிகவும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத ரகசியமாகத் தயாரிக்கப்படும் கீ கொண்டே முடியும்.

Failover: பேக் அப் வழியில் இயங்கும் ஒரு செயல்முறை. சிஸ்டத்தின் முக்கிய சாதனங்களில் பிரச்னை ஏற்பட்டு செயல்பட முடியாமல் போனால் இரண்டாம் நிலையில் உள்ள சாதனங்கள் அந்த செயல்பாட்டினை எடுத்துச் செயல்படும் நிலை. ப்ராசசர், சர்வர், நெட்வொர்க் அல்லது டேட்டாபேஸ் ஆகியவை செயல் இழக்கையில் கூடுதல் திறன் கொண்ட கம்ப்யூட்டர் சிஸ்டங்களில் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படும்.

MMC - Multimedia Card: பிளாஷ் மெமரி கார்டினைப் போல, மல்ட்டி மீடியா கார்டுகளையும் பலவகையான பைல்களை ஸ்டோர் செய்திடப் பயன்படுத்தலம். போட்டோ, வீடியோ, மியூசிக், சாப்ட்வேர் என எவ்வகை பைல்களையும் பதிந்து வைக்கலாம். இந்த கார்டுகள் வெவ்வேறு வகையான வோல்டேஜ் நிலையைப் பயன்படுத்துவதால் இவற்றைக் கையாள்கையில் கவனமாக இருக்க வேண்டும்.

Back up Domain Controller: விண்டோஸ் நெட் வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் பிரைமரி டொமைன் கண்ட்ரோலரின் பேக் அப் ஆகச் செயல்படுவதனை இது குறிக்கிறது. அவை செயல் இழக்கையில் இந்த பேக் அப் டொமைன் கண்ட்ரோலர்கள் அதன் செயல்பாட்டினை மேற்கொள்கின்றன. இவை செக்யூரிட்டி சார்ந்த செயல்பாடுகளையும் மேற்கொள்ளும் வகையில் செட் செய்யப்பட்டிருக்கும்.
Thursday, October 18, 2012

முதன் முறையாக டேட்டா சென்டர்களின் படங்களை வெளியிட்டது கூகுள்


இணைய உலகில் தனக்கென தனியிடத்தினை கொண்டுள்ள கூகுள் நிறுவனம் முதன் முறையாக அதன் டேட்டா சென்டர்களிள் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் யூடியூப், ஜீ மெயில் என அனைத்து விடயங்களிலிருந்து பெறப்படும் டேட்டாக்கள் மேலும் அது தொடர்பான செயற்பாடுகள் எல்லாம் இங்கேயே இடம்பெறுகின்றது.

இவ்வாறு பெறுமிமிக்க இந்த இடத்திற்கு வெகு சிலரே அனுமதிக்கப்பட்டுள்ளனர்அந்நிறுவனத்தின்ஊழியர்களேஅனுமதிக்கப்படுவதில்லை.

பயனர்களின் தரவுகள் மீதான பாதுகாப்பு காரணங்களை கருத்திற்கொண்டே இந்த சென்டர்களில் மட்டுப்படுத்தப்பட்ட சிலரே அனுமதிக்கப்படுவதாக கூகுள் நிறுவனம் தெரிவிக்கின்றது.

கூகுளின் முக்கியமான ' டேட்டா சென்டர்கள்' அமைந்துள்ள 8 இடங்களாவன

Berkeley County, S.C.
Council Bluffs, Iowa
Douglas County, Ga.
Mayes County, Okla.
Lenoir, N.C.
The Dalles, Ore.
Hamina, Finland
St. Ghislain, Belgium.

இவை தவிர தற்போது சிலி, சிங்கப்பூர், ஹொங்கொங், தாய்வான் ஆகிய நாடுகளிலும்  கூகுள் நிறுவனம் டேட்டா சென்டர்களை நிர்மாணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போது கூகுளினால் வெளியிடப்பட்டுள்ள கண்கவரும் வகையிலமைந்து டேட்டா சென்டர்களின் படங்கள் இங்கே...




















பூமிக்கு பின்புறமாக புதிய கோள் கண்டுபிடிப்பு!



விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் புதிய கோள் ஒன்றை கண்டுபிடித்தனர். இந்த கோள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற பூமிக்கு பின்புறமாக அமைந்துள்ளது. பூமியைப் போன்ற அளவிலேயே இந்த புதிய கோளும் உள்ளது. புதிய கோள் அதன் சூரியனுக்கு வெகு அருகில் இருக்கிறது. இதன் சுற்றுப்புற வெப்ப நிலை 1,200 டிகிரி செல்சியஸ் (2 ஆயிரத்து 192 டிகிரி பாரன்ஹீட்) ஆகும்.

புதிய கோள் கண்டுபிடிப்பு பற்றிய தகவல்களை ஜெனீவாவில் ஸ்டீபன் உத்ரி, சேவியர் டமஸ்கியூ ஆகிய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நேச்சர் என்ற அறிவியல் பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர். இது குறித்து ஸ்டீபன் உத்ரி கூறுகையில், பூமியின் பின்னால் புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

இது நமது பக்கத்து வீடு போன்று, வெகு அருகில் அமைந்திருப்பது சிறப்பானது என தெரிவித்தார். இதே போன்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானி கிரேக் லாப்லினும் கருத்து தெரிவித்தார்.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

காத்தான்குடி கடலில் ஏற்பட்ட மாற்றமும் 2012 உலக அழிவும் ஒரு கண்ணோட்டம்,


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்) 

காத்தான்குடி கடற்கரையில் அதிகளவான மீன்கள் ,இராட்சத ஆமை இறந்த நிலையில் கரையொதுங்கியவண்ணம் உள்ளன.இதனோடு சிறிய பாம்பு போன்ற வகையான மீன் இனங்களும் சிறிய மீன்களும் இறந்த நிலையில்கரையொதுங்கியுள்ளன.




நேற்றைய தினம் இப்பகுதியில் அதிகளவான சாளை இன மீன்கள் உயிருடன் கரையோதிங்கியமை குறிப்பிடத்தக்கது. 

அடிக்கடி வரும் பூகம்பம், வராது வந்த சுனாமி, குளோபல் வார்மிங் எனச் சொல்லப்படும் புவி வெப்பமயமாதல் போன்ற நிகழ்வுகள் உலக மக்களின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அடுத்த ஒரு செய்தி நம்மை மிரள வைக்கிறது. அதாவது 2012, டிசம்பர் 21ம் தேதி உலகம் அழியப்போகிறது

2000ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது என இப்படித்தான் புரளியைக் கிளப்பினார்கள், இப்பவுமா? என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. ஏனெனில் நானும் அப்படித்தான் நினைத்தேன் அந்தச் செய்தியைப் படித்த பொழுது, ஆனால் அவர்கள் கொடுக்கும் ஆராய்ச்சி ஆதாரங்களை கண்களில் விளக்கெண்ணெயை ஊற்றிக் கொண்டு பார்த்தால் அது உண்மை தானோ என எண்ணத் தோன்றுகிறது அதாவது எந்தவொரு ஆற்றலுமே தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் தன்மையுடையது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இதைத்தான் சின்ன வயதில் நாம் படித்திருக்கிறோம், ஒரு ஆற்றலை வேறொரு ஆற்றலாக மாற்ற இயலும். ஆனால் ஆற்றலை அழிக்க முடியாது என. அதைத்தான் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இயற்கை பேராற்றல்களின் ஒன்றான பால்வெளி மண்டலத்தின் மையப்பகுதி (அதிகாந்த மையம்) தன்னைத்தானே தனது துருவங்களை மாற்றிக் கொள்ள இருக்கிறதாம் அந்த சமயத்தில் சூரியனும், அதனைச் சுற்றியுள்ள கோள்களும் பிரபஞ்ச மையத்தின் கரு வளையத்திற்குள் சென்று மறைந்து விடுமாம். மீண்டும் புதிய கோள்கள், விண்மீன்கள் தோன்றி புதுப்பொலிவுடன் உயிர்கள் உருவாகும் என அச்செய்திகள் கூறுகின்றன. இது நிகழவிருக்கும் 4 நாட்களுக்கு முன்பே சூரியன் மறைந்துவிடுமாம்.இது 21.12.2012 அன்று நடைபெறும் என ஆய்வுகள் கூறுகின்றன. இது கட்டுகதை போல் தோன்றினாலும் நமது மனித வளர்ச்சியின் அடுத்த கட்டமான விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பல நாடுகளில் இருந்து ஏவப்பட்ட லட்சக்கணக்கான வின்வெளி ஓடங்கள் மற்றும் செயற்க்கை கோள்கள் எல்லாம் சுற்றி கொண்டிருக்கும் வட்டத்தில் உள்ள இயற்கை சக்தி நாளுக்கு நாள் குறைந்து வருவதாக தகவல்கள் தெரிகின்றது. எனவே பிரபஞ்சத்தின் மையமாக நாம் கருதும் அந்த கரு வளையம் தன் சக்தியை அதிகப்படுத்தினாலோ அல்லது சக்தியை குறைத்து கொண்டாலோ அதன் சுற்று வட்டத்தில் உள்ள அனைத்து கோள்களும் தங்கள் ஈர்ப்பு சக்தியை இழந்து கரு வளையத்துக்குள் இழுத்து கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.


ஆனால், மற்றொரு தரப்பு விஞ்ஞானிகளோ “பூமி மொத்தமாக அழியாது. தற்போது அடிக்கடி வரும் சுனாமி, பூகம்பத்தைப் போல இன்னும் பெரிய அளவில் வந்து புவியின் அடுக்குகளில் அதாவது பிளேட் என்று சொல்லப்படும் புவி கட்டமைப்பு நகர்ந்து நிலப்பரப்புகள் மாறும், அப்போது இப்போதுள்ள பல உயிரினங்கள் அழிந்து புது உயிரினங்கள் தோன்றும். சூரியன் இன்னும் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு தொடர்ந்து அதன் செயலைச் செய்துக் கொண்டிருக்கும். ஒரு காலத்தில் கடலாக இருந்த பகுதிதான் இன்று இமயமலை. இது போன்ற மாற்றங்கள் தான் நிகழும். ஒரு காலத்தில் இப்பூமியில் வாழ்ந்த டைனோசரும் இந்த மாதிரியான புவி மாறுதலால் தான் அழிந்து போனது” என்கின்றனர். இப்படி இரு மாதிரியான கருத்துகள் நிலவினாலும் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக தெரிகிறது. அதாவது 2012, டிசம்பர் 21 அன்று ஒன்று உலகம் அழியும்; அல்லது உலகம் மாறும் என்பது.


இன்னும் சொல்லப்போனால் கிறிஸ்துவ மதத்தினரின் நம்பிக்கை படி காலம் நெருங்கி விட்டது என்ற வாக்குகள் அதிகம் உபயோகிப்படுகிறது. விவிலியத்தில் சுட்டிகாட்டப்பட்ட நிகழ்வுகள் நடக்கிறதோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம். சுனாமி குறித்தும் இன்னும் பல பேரழிவுகள் குறித்தும் சில உண்மைகள் மறைந்திருப்பதாகவே அவர்கள் நம்புகிறார்கள் அப்படி அவை உண்மையாக இருக்குமே ஆனால் உலகம் என்பது அப்படியே இருக்கும் ஆனால் மனித இனமும் பிற உயிர்களும் அழிந்து புதிய பல உயிர்கள் உருவாகலாம். எப்படி இருந்தாலும் இந்த அழிவு என்பது மட்டும் அழியாமல் சுற்றி கொண்டிருக்கிறது. அப்படி உலகம் அழியாமல் உயிர்கள் அழிந்து புதிய உயிர்கள் தோன்றுவதாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்கிற அறிவியலின் வார்த்தை உண்மையாக இருக்க வாய்ப்புகள் அதிகம்தான் காரணம் நம் மனித வாழ்க்கை என்பது சிதைந்து விட்டது என்றே தோன்றகூடிய அளவில்தான் நம் வாழ்க்கை இருக்கிறது. உணவை எடுத்து கொண்டால் இயற்கை உணவுகள் என்பது போய் எல்லாமே செயற்கையான உணவைத்தான் உண்டு மகிழ்கிறோம். மனிதர்களுக்கான பல குணாதியங்கள் மாறி வேறு ஒரு ஜந்துவாக மாறி கொண்டிருக்கும் மனிதர்களை நாம் தினமும் படித்தும் கண்டும் கொண்டுதான் இருக்கின்றோம். மனிதம் செத்துவிட்டது என்பது இன்று பொதுவான வாக்காக மாறி இருக்கும் சூழ்நிலையில் கொத்து கொத்தாக மனித உயிர்கள் கொல்லப்பட்டு வரும் சூழ்நிலையில் இன்னும் சில பகுதிகளில் மனிதர்கள் மனித வாழ்க்கை வாழ முடியாத சூழ்நிலையில் இந்த உலகம் அழிந்தால்தான் என்ன? என்ற எண்ணமும் தோன்றாமல் இல்லை.

எது எப்படியோ உலகம் அழியும் என்பது பற்றி மேலும் சந்தேகம் இருந்தாலோ, என் மேல் சந்தேகம் இருந்தாலோ நீங்கள் End of the World Dec 21-2012 என்ற வார்த்தையைக் கொண்டு இணையத் தளத்தில் தேடி பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இது பற்றி படங்களோடு விளக்கம் அளித்துள்ளனர் விஞ்ஞானிகள். இதை நிரூபிக்கும் வகையில் புவியும் அடிக்கடி ஆட்டம் போடுகிறது. கடலும் கரையையும் கடந்து வருகிறது. என்னதான் நடக்கும்… பொறுத்திருந்து பார்ப்போம்!!
 c                                                                                                     Authorized by NIFRAS



Saturday, August 4, 2012

அடுத்த வாரம் டேப்லட் சந்தையை கலக்கும் பிளாக்பெர்ரி


RIM to Launch New 4G LTE PlayBook Next Week4ஜி எல்டிஇ பிளேபுக் டேப்லட்டினை அடுத்த வாரம் கனாடாவில் அறிமுகம் செய்கிறது பிளாக்பெர்ரி நிறுவனம். வெகு

மாதங்களுக்கு முன்பே பிளாக்பெர்ரி நிறுவனம் புதிய 4ஜி எல்டிஇ ப்ளேபுக் டேப்லட் பற்றிய பேச்சு அடிபட்டு கொண்டே இருந்தது.
ஆனால் சிறந்த தொழில் நுட்பங்களை வழங்குவதன் காரணமாக 4ஜி எல்டிஇ ப்ளேபுக் டேப்லட் அறிமுகமாவது தாமதமாகி வந்தது. ஆனால் இந்த டேப்லட்டினை பிளாக்பெர்ரி நிறுவனம் அடுத்த வாரம் அறிமுகம் செய்கிறது என்று இந்த டேப்லட்டின் தயாரிப்பாளர்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கும் முன்பு 4ஜி எல்டிஇ ப்ளேபுக் டேப்லட் கூடிய விரைவில் அறிமுகமாகும் என்ற செய்தியை தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இப்போது இந்த டேப்லட் அடுத்த வாரம் அறிமுகம் ஆகும் என்பது முதல் கொண்டு, எந்தெந்த நாடுகளில் அறிமுகமாகும் என்பது வரை தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த டேப்லட்டில் உள்ள 4ஜி எல்டிஇ தொழில் நுட்பம், அதி வேகத்தில் தகவல்களை டவுன்லோட் செய்ய உதவும். பிளாக்பெர்ரியின் இந்த புதிய டேப்லட் 32 ஜிகாபைட்ஸ் மெமரி வசதியுடன் களமிறங்கும்.
4ஜி எல்டிஇ ப்ளேபுக் டேப்லட் அமெரிக்கா, ஐரோப்பா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் அறிமகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிளாக்பெர்ரியின் மின்னணு சாதனங்களுக்கு நமது நாட்டிலும் சிறந்த வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் இந்த 4ஜி எல்டிஇ ப்ளேபுக் டேப்லட் நமது நாட்டிற்கும் வருகை தரும் என்று கருதப்படுகிறது.
Sunday, July 8, 2012

இன்று 9 ஜூலை 2012 இணையத்தை முடக்க போகும் வைரஸ், உங்கள் கணினியை காப்பாற்ற

இன்றைய இணையதளங்களில் ஹாட் டாபிக் இது தான். வரும் திங்கட் கிழமை 9 July 2012 அன்று பெரும்பாலான கணினிகள் இணையத்தை பயன்படுத்த முடியாது. DNS Changer என்ற வைரஸ் இணையத்தை முடக்க போகிறது என்று. இதை பற்றி சற்று விரிவாக மற்றும் இந்த வைரஸில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதை பற்றியும் கீழே காண்போம்.
DNS(Domain Name System) என்பது நாம் கொடுக்க கூடிய தளத்தின் முகவரியை (ex: www.google.com) கணினிக்கு புரியும் வகையில் அந்த தளத்தின் சரியான ஐபி எண்ணாக மாற்றி அந்த குறிப்பிட்ட தளங்கள் திறக்க உதவி புரிகிறது. உதாரணமாக www.facebook.com என கொடுத்தால் 204.15.20.0 என்ற ஐபி எண்ணாக மாற்றி தரும்.
இப்பொழுது ஆரம்பித்துள்ள புதிய பிரச்சினை என்னவென்றால் DNS Changer என்ற ஒரு அபாயகரமான வைரசை உருவாக்கி உள்ளனர். இந்த வைரஸ் DNS சர்வர்களில் புகுந்து நாம் கொடுக்க கூடிய இணைய முகவரியை போலியான ஐபி முகவரியை மாற்றி உங்கள் இணையத்தை செயலிழக்க வைக்கின்றனர். மற்றும் போலி தளங்களை வர வைத்து பணம் பறிக்கவும், கணினியில் மால்வேர்களை புகுத்தி சில முக்கிய ரகசியங்களையும் திருடுகின்றனர். இந்த வைரஸ் கடந்த வருடம் நவம்பர் மாதம் கண்டறியப்பட்டது. இது வரை உலகம் முழுவதும் பல லட்ச கணக்கான கணினிகள் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த வருடம் வைரஸ் உருவாக்கப்பட்டும் இன்னும் பலர் தொடர்ந்து எந்த பதிப்பும் இல்லாமல் இணைய சேவையை பெற்று கொண்டிருக்க காரணம் அமெர்க்காவின் உளவு அமைப்பான FBI இந்த வைரசை கண்டறிந்து உள்ளனர். இது சம்பந்தமாக FBI இதுவரை 7 பேரை கைது செய்து உள்ளது. அதில் 6 பேர் எஸ்தானியா நாட்டை சேர்ந்தவர்கள் ஒருவர் ரஷ்யாவை சேர்ந்தவர். இந்த வைரஸிற்கு தற்காலிக தீர்வாக தற்காலிக DNS சர்வர்களை நிறுவி அதன் மூலம் DNS Changer வைரசினால் பாதிக்கப்பட்ட கணினிகளும் தொடர்ந்து இணைய சேவையை பெற்று வந்தன.
இப்பொழுது பிரச்சினை என்னெவென்றால் இந்த தற்காலிக DNS சர்வர்களின் செயல்பாடு வரும் திங்கட் கிழமை 9 ஜூலை 2012 அன்று நிறுத்த பட இருக்கிறது. ஆதலால் பாதிக்கப்பட்ட கணினிகள் தொடர்ந்து இனி இணைய சேவையை பயன்படுத்த முடியாது. ஆகவே வைரசை இன்னும் நீக்காமல் இருக்கும் கணினிகள் வரும் திங்கட் கிழமை முதல் இணையத்தை பயன்படுத்த முடியாது. அல்லது பயன்படுத்தினால் உங்கள் கணினிகள் மேலும் பாதிக்கப்படலாம். இதனால் உலகம் முழுவதும் சுமார் 277,000 கணினிகள் பாதிக்க படலாம் என கருதப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 64,000 கணினிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக FBI அறிவித்து உள்ளது.
உங்கள் கணினி பாதிக்கப்பட்டுள்ளதா என அறிய:
உங்கள் கணினி DNS Changer வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதா என அறிய இந்த தளத்திற்குwww.dns-ok.us சென்றால் போதும் உங்கள் கணினி பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை இந்த தளம் உங்களுக்கு சொல்லி விடும். கீழே இருப்பதை போல வந்தால் உங்கள் கணினி பாதிக்க படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஒரு வேலை உங்கள் கணினி பாதிக்க பட்டிருந்தால் பச்சை நிறத்திற்கு பதிலாக சிவப்பு நிறத்தில் தெரியும்.
 
இந்த வைரசை முற்றிலுமாக அழிக்க :
ஒருவேளை உங்கள் கணினி பாதிக்க பட்டிருந்தால் முதலில் இந்த படிவத்தைforms.fbi.gov/dnsmalware பூர்த்தி செய்யவும். உங்கள் கணினியில் இருந்து அந்த வைரசை நீக்குவது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
விண்டோஸ் XP, Vista, 7 கணினிகளுக்கு:
DNS Changer வைரசை கணினியில் இருந்து நீக்குவதற்காக பிரபல ஆன்ட்டிவைரஸ் நிறுவனமான அவிரா ஒரு புதிய மென்பொருளை உருவாக்கி உள்ளனர். இந்த லிங்கில் Avira DNS Repair சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
டவுன்லோட் ஆகியதும் exe பைலை இரண்டு கிளிக் செய்து இன்ஸ்டால் செய்ய தொடங்கியவுடன் கீழே இருப்பதை போல வந்தால் உங்கள் கணினி பாதுக்காப்பாக உள்ளது. ஆகவே இந்த மென்பொருள் உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகாது.
ஒருவேளை பாதிக்கப்பட்டிருந்தால் இந்த மென்பொருள் அந்த வைரசை கண்டறிந்து உங்கள் கணினியில் இருந்து அழித்து விடும்.
மேக்(Mac) கணினிகளுக்கு:
மேக் கணினிகளில் இருந்து இந்த வைரசை நீக்க இந்த மென்பொருளை DNS Changer Removal Tool டவுன்லோட் செய்து நீக்கி கொள்ளுங்கள்.
Wednesday, June 20, 2012

லினக்ஸ் பயனர்களுக்கு Skype 4.0 புதிய வெர்சன் வெளியீடு


நீண்ட நாட்களுக்கு பிறகு லினக்ஸ் பயனாளிகளுக்கு ஸ்கைபின் புதிய வெர்சனனான Skype 4.0 வெளியிடப்பட்டுள்ளது. ஸ்கைப் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்கிய பிறகு இனி லினக்ஸ் பயனாளிகள் ஸ்கைப் மென்பொருளை உபயோகிக்க முடியாது என்றும் இந்த சேவையை விரைவில் நிறுத்தி விடும் என்றே பெரும்பாலானவர்கள் நினைத்திருக்கலாம் அதற்கேற்ற மாதிரி வெகுநாட்களாக எந்த புதிய வெர்சனும் வெளியிடப்படாமல் இருந்தது
.

இந்த நிலையில் லினக்ஸ் பயனாளிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் Skype 4.0 என்ற புதிய வெர்சனை வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். மற்றும் இந்த புதிய வெர்சனில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

புதிய அம்சங்கள்:
·         New Conversations View
·         New Call View 
·         Better call quality 
·         Improved Video call quality 
·         Improved chat synchronization 
·         New presence and emoticon icons 
·         Store and view phone numbers in a Skype contacts profile.
இந்த புதிய வெர்சனை உபயோகிக்க 1GHz processor, 256MB RAM, and 100MB இருந்தால் போதும்.

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - Skype 4.0 for Linux


Tuesday, June 19, 2012

ப்ளேம் (Flame) வைரஸ் எச்சரிக்கை



புதிய வைரஸ் ஒன்று வேகமாகப் பரவி வருவதனை, வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் காஸ்பெர்ஸ்கி நிறுவனம் கண்டறிந்து எச்சரிக்கை வழங்கியுள்ளது.
 ஈரான் நாட்டில் பரவியுள்ள இந்த வைரஸ் விரைவில் மற்ற நாடுகளிலும் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களில் பரவலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் பன்னாட்டு தொலைதொடர்பு அமைப்பு அறிவித்துள்ளது. 
(http://in.reuters.com/article/ 2012/05/29/cyberwar-flame-idINDEE84S0 EU20120529) இந்த வைரஸ் இதுவரை தாங்கள் சந்திக்காத ஒரு குழப்பமான குறியீட்டினைக் கொண்டு இயங்குவதாக காஸ்பெர்ஸ்கி அறிவித்துள்ளது. இது குறித்து மேலும் சில தகவல்களை இங்கு பார்க்கலாம்.

ப்ளேம் வைரஸ், கம்ப்யூட்டரை நேரடியாகத் தாக்காமல், ட்ரோஜன் வைரஸ் போலவே நுழைகிறது. பெரும்பாலும் பாதிக்கப்பட்ட இணைய தளங்களிலிருந்து, அவற்றை அணுகும் கம்ப்யூட்டர்களுக்குச் செல்கிறது. பின்னர், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ், லோக்கல் நெட்வொர்க் ஆகியவற்றின் மூலம் மற்ற கம்ப்யூட்டர்களை அடைகிறது.

பாதிப்பை ஏற்படுத்த கம்ப்யூட்டரை அடைந்த பின்னர், பாஸ்வேர்ட் தகவல்களைத் திருடுதல், மைக் மூலம் அனுப்பப் படும் ஆடியோ தகவல்களைப் பதிந்து அனுப்புதல், முக்கிய புரோகிராம் இயக்கங்களின் ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்புதல், இன்ஸ்டண்ட் மெசேஜ் விண்டோக்களில் உள்ள தகவல்களை எடுத்து அனுப்புதல் போன்ற அனைத்து திருட்டு வேலைகளை யும் நாசூக்காக மேற்கொள்கிறது.

கம்ப்யூட்டருடன் புளுடூத் முறையில் இணைக்கப்படும் சாதனங்களிலிருந்தும் தகவல்களைத் திருடுகிறது இந்த வைரஸ். திருடப்படும் தகவல்கள் அனைத்தும், உலகின் பல நாடுகளில் இயங்கும் இதன் சர்வர்களுக்கு அனுப்பப்படுகின்றன.

2010 ஆம் ஆண்டில், ஈரான் நாட்டில் பெரும் சேத விளைவுகளை ஏற்படுத்திய ஸ்டக்ஸ்நெட் (Stuxnet worm) போல இது செயல்படுகிறது. ஆனால், அதனைக் காட்டிலும் குழப்பமான குறியீட்டில் இந்த வைரஸ் எழுதப்பட் டுள்ளது.

எனவே இதனைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கிறது. இந்த வைரஸ் பைல் 20 எம்பி இடத்தை எடுத்துக் கொள்ளும் அளவிற்குப் பெரியதாக உள்ளது.

இந்த வைரஸ், வங்கி இணையக் கணக்கிலிருந்து பணம் மாற்றும் வழியைக் கொண்டிருக்கவில்லை என்பது சற்று ஆறுதலான விஷயம் தான். ஈரான் எண்ணை வள நிறுவனங்களில் குழப்பத்தினை உண்டு பண்ண இது தயாரிக்கப்பட்டி ருக்கலாம் என்றும் ஒரு கோணத்தில் ஆய்வு நடக்கிறது.

அப்படி இருந்தால், மற்ற நாடுகளின் அடிப்படைக் கட்டமைப்பில் நாச வேலைகளை மேற்கொள்ள இந்த வைரஸ் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது

Friday, June 15, 2012

facebook க்கு Microsoft வைக்கும் இன்னுமோர் செக்!




சமூக வலையமைப்பின் முடிசூடா மன்னனாக திகழும் Facebook க்கு போட்டியாக SO.CL எனும் சமூக இணையத்தை அண்மையில் Microsoft ஆரம்பித்திருந்தது. இந் நிலையில் Facebook க்கு மேலும் நெருக்கடி நிலையை ஏற்படுத்த இன்னுமோர் பிரபல சமூகதளம் ஒன்றை வாங்கவுள்ளது Microsoft.
சமூக வலை தளமான Yammer (யாமர்) அமெரிக்காவில் மிகவும் பிரபலமானது. நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் வகையில் இந்த சமூக வலைதளம் செயல்பட்டு வருகிறது.
தற்போது யாமர் சமூக தளத்தை 2,00,000க்கும் அதிகமான நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன
Yammer ஐ 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க Microsoft நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதனால் விரைவில் Yammer, Microsoft வசம் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Yammer ஐ Microsoft நிறுவனம் சமூகவலைத்தளமாக மாத்திரமின்றி Wikipedia போன்ற தகவல் களஞ்சியமாகவும் பயன்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Sunday, May 6, 2012

பென்டிரைவில் பாதுகாப்பான Safely Remove வசதி!!


யு.எஸ்.பி டிரைவ்களை பயன்படுத்தும் போது, அவசரத்தில் Safely Remove கொடுக்காமல் மறந்து விடுகிறோம்.இதனால் பென்டிரைவ் போன்ற யு.எஸ்.பி டிரைவ்கள் பழுதடைய வாய்ப்பு அதிகம். Safely Remove கொடுக்காமல், அதே நேரம் பென்டிரைவிற்கு எந்தவித பிரச்னையும் வராமல் தடுக்கலாம்.

இதற்கு :
1. முதலில் உங்கள் பென்டிரைவ் அல்லது வேறு ஏதேனும் USB Device ஒன்றை 
உங்கள் கணணியில் செருகவும்.

2. இப்போது My Computer மீது ரைட் கிளிக் செய்து Manage என்பதை கிளிக் செய்யவும். இப்போது புதிய விண்டோ ஒன்று வரும், அதில் இடது புறத்தில் Device Manager என்பதை தெரிவு செய்யவும்.

3. இப்போது உங்கள் கணணியில் உள்ள Device கள் அனைத்தும் அதில் காண்பிக்கப்படும். அதில் Disk Drives -இல் உங்கள் Pen Drive/ USB Device பெயரை கண்டுபிடிக்கவும். அதன் மீது Double Click செய்யவும்.

4. இப்போது வரும் புதிய விண்டோவில் Policies என்ற Tab-ல் “Quick removal (default)” என்பதை தெரிவு செய்யவும்.

அவ்வளவு தான், இனிமேல் நீங்கள் Safely Remove என்பதை கொடுக்க தேவையில்லை.