Pages

Loading...

LIKE

Thursday, October 18, 2012

முதன் முறையாக டேட்டா சென்டர்களின் படங்களை வெளியிட்டது கூகுள்


இணைய உலகில் தனக்கென தனியிடத்தினை கொண்டுள்ள கூகுள் நிறுவனம் முதன் முறையாக அதன் டேட்டா சென்டர்களிள் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் யூடியூப், ஜீ மெயில் என அனைத்து விடயங்களிலிருந்து பெறப்படும் டேட்டாக்கள் மேலும் அது தொடர்பான செயற்பாடுகள் எல்லாம் இங்கேயே இடம்பெறுகின்றது.

இவ்வாறு பெறுமிமிக்க இந்த இடத்திற்கு வெகு சிலரே அனுமதிக்கப்பட்டுள்ளனர்அந்நிறுவனத்தின்ஊழியர்களேஅனுமதிக்கப்படுவதில்லை.

பயனர்களின் தரவுகள் மீதான பாதுகாப்பு காரணங்களை கருத்திற்கொண்டே இந்த சென்டர்களில் மட்டுப்படுத்தப்பட்ட சிலரே அனுமதிக்கப்படுவதாக கூகுள் நிறுவனம் தெரிவிக்கின்றது.

கூகுளின் முக்கியமான ' டேட்டா சென்டர்கள்' அமைந்துள்ள 8 இடங்களாவன

Berkeley County, S.C.
Council Bluffs, Iowa
Douglas County, Ga.
Mayes County, Okla.
Lenoir, N.C.
The Dalles, Ore.
Hamina, Finland
St. Ghislain, Belgium.

இவை தவிர தற்போது சிலி, சிங்கப்பூர், ஹொங்கொங், தாய்வான் ஆகிய நாடுகளிலும்  கூகுள் நிறுவனம் டேட்டா சென்டர்களை நிர்மாணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போது கூகுளினால் வெளியிடப்பட்டுள்ள கண்கவரும் வகையிலமைந்து டேட்டா சென்டர்களின் படங்கள் இங்கே...




















பூமிக்கு பின்புறமாக புதிய கோள் கண்டுபிடிப்பு!



விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் புதிய கோள் ஒன்றை கண்டுபிடித்தனர். இந்த கோள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற பூமிக்கு பின்புறமாக அமைந்துள்ளது. பூமியைப் போன்ற அளவிலேயே இந்த புதிய கோளும் உள்ளது. புதிய கோள் அதன் சூரியனுக்கு வெகு அருகில் இருக்கிறது. இதன் சுற்றுப்புற வெப்ப நிலை 1,200 டிகிரி செல்சியஸ் (2 ஆயிரத்து 192 டிகிரி பாரன்ஹீட்) ஆகும்.

புதிய கோள் கண்டுபிடிப்பு பற்றிய தகவல்களை ஜெனீவாவில் ஸ்டீபன் உத்ரி, சேவியர் டமஸ்கியூ ஆகிய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நேச்சர் என்ற அறிவியல் பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர். இது குறித்து ஸ்டீபன் உத்ரி கூறுகையில், பூமியின் பின்னால் புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

இது நமது பக்கத்து வீடு போன்று, வெகு அருகில் அமைந்திருப்பது சிறப்பானது என தெரிவித்தார். இதே போன்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானி கிரேக் லாப்லினும் கருத்து தெரிவித்தார்.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

காத்தான்குடி கடலில் ஏற்பட்ட மாற்றமும் 2012 உலக அழிவும் ஒரு கண்ணோட்டம்,


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்) 

காத்தான்குடி கடற்கரையில் அதிகளவான மீன்கள் ,இராட்சத ஆமை இறந்த நிலையில் கரையொதுங்கியவண்ணம் உள்ளன.இதனோடு சிறிய பாம்பு போன்ற வகையான மீன் இனங்களும் சிறிய மீன்களும் இறந்த நிலையில்கரையொதுங்கியுள்ளன.




நேற்றைய தினம் இப்பகுதியில் அதிகளவான சாளை இன மீன்கள் உயிருடன் கரையோதிங்கியமை குறிப்பிடத்தக்கது. 

அடிக்கடி வரும் பூகம்பம், வராது வந்த சுனாமி, குளோபல் வார்மிங் எனச் சொல்லப்படும் புவி வெப்பமயமாதல் போன்ற நிகழ்வுகள் உலக மக்களின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அடுத்த ஒரு செய்தி நம்மை மிரள வைக்கிறது. அதாவது 2012, டிசம்பர் 21ம் தேதி உலகம் அழியப்போகிறது

2000ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது என இப்படித்தான் புரளியைக் கிளப்பினார்கள், இப்பவுமா? என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. ஏனெனில் நானும் அப்படித்தான் நினைத்தேன் அந்தச் செய்தியைப் படித்த பொழுது, ஆனால் அவர்கள் கொடுக்கும் ஆராய்ச்சி ஆதாரங்களை கண்களில் விளக்கெண்ணெயை ஊற்றிக் கொண்டு பார்த்தால் அது உண்மை தானோ என எண்ணத் தோன்றுகிறது அதாவது எந்தவொரு ஆற்றலுமே தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் தன்மையுடையது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இதைத்தான் சின்ன வயதில் நாம் படித்திருக்கிறோம், ஒரு ஆற்றலை வேறொரு ஆற்றலாக மாற்ற இயலும். ஆனால் ஆற்றலை அழிக்க முடியாது என. அதைத்தான் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இயற்கை பேராற்றல்களின் ஒன்றான பால்வெளி மண்டலத்தின் மையப்பகுதி (அதிகாந்த மையம்) தன்னைத்தானே தனது துருவங்களை மாற்றிக் கொள்ள இருக்கிறதாம் அந்த சமயத்தில் சூரியனும், அதனைச் சுற்றியுள்ள கோள்களும் பிரபஞ்ச மையத்தின் கரு வளையத்திற்குள் சென்று மறைந்து விடுமாம். மீண்டும் புதிய கோள்கள், விண்மீன்கள் தோன்றி புதுப்பொலிவுடன் உயிர்கள் உருவாகும் என அச்செய்திகள் கூறுகின்றன. இது நிகழவிருக்கும் 4 நாட்களுக்கு முன்பே சூரியன் மறைந்துவிடுமாம்.இது 21.12.2012 அன்று நடைபெறும் என ஆய்வுகள் கூறுகின்றன. இது கட்டுகதை போல் தோன்றினாலும் நமது மனித வளர்ச்சியின் அடுத்த கட்டமான விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பல நாடுகளில் இருந்து ஏவப்பட்ட லட்சக்கணக்கான வின்வெளி ஓடங்கள் மற்றும் செயற்க்கை கோள்கள் எல்லாம் சுற்றி கொண்டிருக்கும் வட்டத்தில் உள்ள இயற்கை சக்தி நாளுக்கு நாள் குறைந்து வருவதாக தகவல்கள் தெரிகின்றது. எனவே பிரபஞ்சத்தின் மையமாக நாம் கருதும் அந்த கரு வளையம் தன் சக்தியை அதிகப்படுத்தினாலோ அல்லது சக்தியை குறைத்து கொண்டாலோ அதன் சுற்று வட்டத்தில் உள்ள அனைத்து கோள்களும் தங்கள் ஈர்ப்பு சக்தியை இழந்து கரு வளையத்துக்குள் இழுத்து கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.


ஆனால், மற்றொரு தரப்பு விஞ்ஞானிகளோ “பூமி மொத்தமாக அழியாது. தற்போது அடிக்கடி வரும் சுனாமி, பூகம்பத்தைப் போல இன்னும் பெரிய அளவில் வந்து புவியின் அடுக்குகளில் அதாவது பிளேட் என்று சொல்லப்படும் புவி கட்டமைப்பு நகர்ந்து நிலப்பரப்புகள் மாறும், அப்போது இப்போதுள்ள பல உயிரினங்கள் அழிந்து புது உயிரினங்கள் தோன்றும். சூரியன் இன்னும் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு தொடர்ந்து அதன் செயலைச் செய்துக் கொண்டிருக்கும். ஒரு காலத்தில் கடலாக இருந்த பகுதிதான் இன்று இமயமலை. இது போன்ற மாற்றங்கள் தான் நிகழும். ஒரு காலத்தில் இப்பூமியில் வாழ்ந்த டைனோசரும் இந்த மாதிரியான புவி மாறுதலால் தான் அழிந்து போனது” என்கின்றனர். இப்படி இரு மாதிரியான கருத்துகள் நிலவினாலும் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக தெரிகிறது. அதாவது 2012, டிசம்பர் 21 அன்று ஒன்று உலகம் அழியும்; அல்லது உலகம் மாறும் என்பது.


இன்னும் சொல்லப்போனால் கிறிஸ்துவ மதத்தினரின் நம்பிக்கை படி காலம் நெருங்கி விட்டது என்ற வாக்குகள் அதிகம் உபயோகிப்படுகிறது. விவிலியத்தில் சுட்டிகாட்டப்பட்ட நிகழ்வுகள் நடக்கிறதோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம். சுனாமி குறித்தும் இன்னும் பல பேரழிவுகள் குறித்தும் சில உண்மைகள் மறைந்திருப்பதாகவே அவர்கள் நம்புகிறார்கள் அப்படி அவை உண்மையாக இருக்குமே ஆனால் உலகம் என்பது அப்படியே இருக்கும் ஆனால் மனித இனமும் பிற உயிர்களும் அழிந்து புதிய பல உயிர்கள் உருவாகலாம். எப்படி இருந்தாலும் இந்த அழிவு என்பது மட்டும் அழியாமல் சுற்றி கொண்டிருக்கிறது. அப்படி உலகம் அழியாமல் உயிர்கள் அழிந்து புதிய உயிர்கள் தோன்றுவதாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்கிற அறிவியலின் வார்த்தை உண்மையாக இருக்க வாய்ப்புகள் அதிகம்தான் காரணம் நம் மனித வாழ்க்கை என்பது சிதைந்து விட்டது என்றே தோன்றகூடிய அளவில்தான் நம் வாழ்க்கை இருக்கிறது. உணவை எடுத்து கொண்டால் இயற்கை உணவுகள் என்பது போய் எல்லாமே செயற்கையான உணவைத்தான் உண்டு மகிழ்கிறோம். மனிதர்களுக்கான பல குணாதியங்கள் மாறி வேறு ஒரு ஜந்துவாக மாறி கொண்டிருக்கும் மனிதர்களை நாம் தினமும் படித்தும் கண்டும் கொண்டுதான் இருக்கின்றோம். மனிதம் செத்துவிட்டது என்பது இன்று பொதுவான வாக்காக மாறி இருக்கும் சூழ்நிலையில் கொத்து கொத்தாக மனித உயிர்கள் கொல்லப்பட்டு வரும் சூழ்நிலையில் இன்னும் சில பகுதிகளில் மனிதர்கள் மனித வாழ்க்கை வாழ முடியாத சூழ்நிலையில் இந்த உலகம் அழிந்தால்தான் என்ன? என்ற எண்ணமும் தோன்றாமல் இல்லை.

எது எப்படியோ உலகம் அழியும் என்பது பற்றி மேலும் சந்தேகம் இருந்தாலோ, என் மேல் சந்தேகம் இருந்தாலோ நீங்கள் End of the World Dec 21-2012 என்ற வார்த்தையைக் கொண்டு இணையத் தளத்தில் தேடி பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இது பற்றி படங்களோடு விளக்கம் அளித்துள்ளனர் விஞ்ஞானிகள். இதை நிரூபிக்கும் வகையில் புவியும் அடிக்கடி ஆட்டம் போடுகிறது. கடலும் கரையையும் கடந்து வருகிறது. என்னதான் நடக்கும்… பொறுத்திருந்து பார்ப்போம்!!
 c                                                                                                     Authorized by NIFRAS



Saturday, August 4, 2012

அடுத்த வாரம் டேப்லட் சந்தையை கலக்கும் பிளாக்பெர்ரி


RIM to Launch New 4G LTE PlayBook Next Week4ஜி எல்டிஇ பிளேபுக் டேப்லட்டினை அடுத்த வாரம் கனாடாவில் அறிமுகம் செய்கிறது பிளாக்பெர்ரி நிறுவனம். வெகு

மாதங்களுக்கு முன்பே பிளாக்பெர்ரி நிறுவனம் புதிய 4ஜி எல்டிஇ ப்ளேபுக் டேப்லட் பற்றிய பேச்சு அடிபட்டு கொண்டே இருந்தது.
ஆனால் சிறந்த தொழில் நுட்பங்களை வழங்குவதன் காரணமாக 4ஜி எல்டிஇ ப்ளேபுக் டேப்லட் அறிமுகமாவது தாமதமாகி வந்தது. ஆனால் இந்த டேப்லட்டினை பிளாக்பெர்ரி நிறுவனம் அடுத்த வாரம் அறிமுகம் செய்கிறது என்று இந்த டேப்லட்டின் தயாரிப்பாளர்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கும் முன்பு 4ஜி எல்டிஇ ப்ளேபுக் டேப்லட் கூடிய விரைவில் அறிமுகமாகும் என்ற செய்தியை தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இப்போது இந்த டேப்லட் அடுத்த வாரம் அறிமுகம் ஆகும் என்பது முதல் கொண்டு, எந்தெந்த நாடுகளில் அறிமுகமாகும் என்பது வரை தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த டேப்லட்டில் உள்ள 4ஜி எல்டிஇ தொழில் நுட்பம், அதி வேகத்தில் தகவல்களை டவுன்லோட் செய்ய உதவும். பிளாக்பெர்ரியின் இந்த புதிய டேப்லட் 32 ஜிகாபைட்ஸ் மெமரி வசதியுடன் களமிறங்கும்.
4ஜி எல்டிஇ ப்ளேபுக் டேப்லட் அமெரிக்கா, ஐரோப்பா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் அறிமகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிளாக்பெர்ரியின் மின்னணு சாதனங்களுக்கு நமது நாட்டிலும் சிறந்த வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் இந்த 4ஜி எல்டிஇ ப்ளேபுக் டேப்லட் நமது நாட்டிற்கும் வருகை தரும் என்று கருதப்படுகிறது.
Sunday, July 8, 2012

இன்று 9 ஜூலை 2012 இணையத்தை முடக்க போகும் வைரஸ், உங்கள் கணினியை காப்பாற்ற

இன்றைய இணையதளங்களில் ஹாட் டாபிக் இது தான். வரும் திங்கட் கிழமை 9 July 2012 அன்று பெரும்பாலான கணினிகள் இணையத்தை பயன்படுத்த முடியாது. DNS Changer என்ற வைரஸ் இணையத்தை முடக்க போகிறது என்று. இதை பற்றி சற்று விரிவாக மற்றும் இந்த வைரஸில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதை பற்றியும் கீழே காண்போம்.
DNS(Domain Name System) என்பது நாம் கொடுக்க கூடிய தளத்தின் முகவரியை (ex: www.google.com) கணினிக்கு புரியும் வகையில் அந்த தளத்தின் சரியான ஐபி எண்ணாக மாற்றி அந்த குறிப்பிட்ட தளங்கள் திறக்க உதவி புரிகிறது. உதாரணமாக www.facebook.com என கொடுத்தால் 204.15.20.0 என்ற ஐபி எண்ணாக மாற்றி தரும்.
இப்பொழுது ஆரம்பித்துள்ள புதிய பிரச்சினை என்னவென்றால் DNS Changer என்ற ஒரு அபாயகரமான வைரசை உருவாக்கி உள்ளனர். இந்த வைரஸ் DNS சர்வர்களில் புகுந்து நாம் கொடுக்க கூடிய இணைய முகவரியை போலியான ஐபி முகவரியை மாற்றி உங்கள் இணையத்தை செயலிழக்க வைக்கின்றனர். மற்றும் போலி தளங்களை வர வைத்து பணம் பறிக்கவும், கணினியில் மால்வேர்களை புகுத்தி சில முக்கிய ரகசியங்களையும் திருடுகின்றனர். இந்த வைரஸ் கடந்த வருடம் நவம்பர் மாதம் கண்டறியப்பட்டது. இது வரை உலகம் முழுவதும் பல லட்ச கணக்கான கணினிகள் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த வருடம் வைரஸ் உருவாக்கப்பட்டும் இன்னும் பலர் தொடர்ந்து எந்த பதிப்பும் இல்லாமல் இணைய சேவையை பெற்று கொண்டிருக்க காரணம் அமெர்க்காவின் உளவு அமைப்பான FBI இந்த வைரசை கண்டறிந்து உள்ளனர். இது சம்பந்தமாக FBI இதுவரை 7 பேரை கைது செய்து உள்ளது. அதில் 6 பேர் எஸ்தானியா நாட்டை சேர்ந்தவர்கள் ஒருவர் ரஷ்யாவை சேர்ந்தவர். இந்த வைரஸிற்கு தற்காலிக தீர்வாக தற்காலிக DNS சர்வர்களை நிறுவி அதன் மூலம் DNS Changer வைரசினால் பாதிக்கப்பட்ட கணினிகளும் தொடர்ந்து இணைய சேவையை பெற்று வந்தன.
இப்பொழுது பிரச்சினை என்னெவென்றால் இந்த தற்காலிக DNS சர்வர்களின் செயல்பாடு வரும் திங்கட் கிழமை 9 ஜூலை 2012 அன்று நிறுத்த பட இருக்கிறது. ஆதலால் பாதிக்கப்பட்ட கணினிகள் தொடர்ந்து இனி இணைய சேவையை பயன்படுத்த முடியாது. ஆகவே வைரசை இன்னும் நீக்காமல் இருக்கும் கணினிகள் வரும் திங்கட் கிழமை முதல் இணையத்தை பயன்படுத்த முடியாது. அல்லது பயன்படுத்தினால் உங்கள் கணினிகள் மேலும் பாதிக்கப்படலாம். இதனால் உலகம் முழுவதும் சுமார் 277,000 கணினிகள் பாதிக்க படலாம் என கருதப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 64,000 கணினிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக FBI அறிவித்து உள்ளது.
உங்கள் கணினி பாதிக்கப்பட்டுள்ளதா என அறிய:
உங்கள் கணினி DNS Changer வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதா என அறிய இந்த தளத்திற்குwww.dns-ok.us சென்றால் போதும் உங்கள் கணினி பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை இந்த தளம் உங்களுக்கு சொல்லி விடும். கீழே இருப்பதை போல வந்தால் உங்கள் கணினி பாதிக்க படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஒரு வேலை உங்கள் கணினி பாதிக்க பட்டிருந்தால் பச்சை நிறத்திற்கு பதிலாக சிவப்பு நிறத்தில் தெரியும்.
 
இந்த வைரசை முற்றிலுமாக அழிக்க :
ஒருவேளை உங்கள் கணினி பாதிக்க பட்டிருந்தால் முதலில் இந்த படிவத்தைforms.fbi.gov/dnsmalware பூர்த்தி செய்யவும். உங்கள் கணினியில் இருந்து அந்த வைரசை நீக்குவது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
விண்டோஸ் XP, Vista, 7 கணினிகளுக்கு:
DNS Changer வைரசை கணினியில் இருந்து நீக்குவதற்காக பிரபல ஆன்ட்டிவைரஸ் நிறுவனமான அவிரா ஒரு புதிய மென்பொருளை உருவாக்கி உள்ளனர். இந்த லிங்கில் Avira DNS Repair சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
டவுன்லோட் ஆகியதும் exe பைலை இரண்டு கிளிக் செய்து இன்ஸ்டால் செய்ய தொடங்கியவுடன் கீழே இருப்பதை போல வந்தால் உங்கள் கணினி பாதுக்காப்பாக உள்ளது. ஆகவே இந்த மென்பொருள் உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகாது.
ஒருவேளை பாதிக்கப்பட்டிருந்தால் இந்த மென்பொருள் அந்த வைரசை கண்டறிந்து உங்கள் கணினியில் இருந்து அழித்து விடும்.
மேக்(Mac) கணினிகளுக்கு:
மேக் கணினிகளில் இருந்து இந்த வைரசை நீக்க இந்த மென்பொருளை DNS Changer Removal Tool டவுன்லோட் செய்து நீக்கி கொள்ளுங்கள்.
Wednesday, June 20, 2012

லினக்ஸ் பயனர்களுக்கு Skype 4.0 புதிய வெர்சன் வெளியீடு


நீண்ட நாட்களுக்கு பிறகு லினக்ஸ் பயனாளிகளுக்கு ஸ்கைபின் புதிய வெர்சனனான Skype 4.0 வெளியிடப்பட்டுள்ளது. ஸ்கைப் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்கிய பிறகு இனி லினக்ஸ் பயனாளிகள் ஸ்கைப் மென்பொருளை உபயோகிக்க முடியாது என்றும் இந்த சேவையை விரைவில் நிறுத்தி விடும் என்றே பெரும்பாலானவர்கள் நினைத்திருக்கலாம் அதற்கேற்ற மாதிரி வெகுநாட்களாக எந்த புதிய வெர்சனும் வெளியிடப்படாமல் இருந்தது
.

இந்த நிலையில் லினக்ஸ் பயனாளிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் Skype 4.0 என்ற புதிய வெர்சனை வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். மற்றும் இந்த புதிய வெர்சனில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

புதிய அம்சங்கள்:
·         New Conversations View
·         New Call View 
·         Better call quality 
·         Improved Video call quality 
·         Improved chat synchronization 
·         New presence and emoticon icons 
·         Store and view phone numbers in a Skype contacts profile.
இந்த புதிய வெர்சனை உபயோகிக்க 1GHz processor, 256MB RAM, and 100MB இருந்தால் போதும்.

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - Skype 4.0 for Linux


Tuesday, June 19, 2012

ப்ளேம் (Flame) வைரஸ் எச்சரிக்கை



புதிய வைரஸ் ஒன்று வேகமாகப் பரவி வருவதனை, வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் காஸ்பெர்ஸ்கி நிறுவனம் கண்டறிந்து எச்சரிக்கை வழங்கியுள்ளது.
 ஈரான் நாட்டில் பரவியுள்ள இந்த வைரஸ் விரைவில் மற்ற நாடுகளிலும் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களில் பரவலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் பன்னாட்டு தொலைதொடர்பு அமைப்பு அறிவித்துள்ளது. 
(http://in.reuters.com/article/ 2012/05/29/cyberwar-flame-idINDEE84S0 EU20120529) இந்த வைரஸ் இதுவரை தாங்கள் சந்திக்காத ஒரு குழப்பமான குறியீட்டினைக் கொண்டு இயங்குவதாக காஸ்பெர்ஸ்கி அறிவித்துள்ளது. இது குறித்து மேலும் சில தகவல்களை இங்கு பார்க்கலாம்.

ப்ளேம் வைரஸ், கம்ப்யூட்டரை நேரடியாகத் தாக்காமல், ட்ரோஜன் வைரஸ் போலவே நுழைகிறது. பெரும்பாலும் பாதிக்கப்பட்ட இணைய தளங்களிலிருந்து, அவற்றை அணுகும் கம்ப்யூட்டர்களுக்குச் செல்கிறது. பின்னர், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ், லோக்கல் நெட்வொர்க் ஆகியவற்றின் மூலம் மற்ற கம்ப்யூட்டர்களை அடைகிறது.

பாதிப்பை ஏற்படுத்த கம்ப்யூட்டரை அடைந்த பின்னர், பாஸ்வேர்ட் தகவல்களைத் திருடுதல், மைக் மூலம் அனுப்பப் படும் ஆடியோ தகவல்களைப் பதிந்து அனுப்புதல், முக்கிய புரோகிராம் இயக்கங்களின் ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்புதல், இன்ஸ்டண்ட் மெசேஜ் விண்டோக்களில் உள்ள தகவல்களை எடுத்து அனுப்புதல் போன்ற அனைத்து திருட்டு வேலைகளை யும் நாசூக்காக மேற்கொள்கிறது.

கம்ப்யூட்டருடன் புளுடூத் முறையில் இணைக்கப்படும் சாதனங்களிலிருந்தும் தகவல்களைத் திருடுகிறது இந்த வைரஸ். திருடப்படும் தகவல்கள் அனைத்தும், உலகின் பல நாடுகளில் இயங்கும் இதன் சர்வர்களுக்கு அனுப்பப்படுகின்றன.

2010 ஆம் ஆண்டில், ஈரான் நாட்டில் பெரும் சேத விளைவுகளை ஏற்படுத்திய ஸ்டக்ஸ்நெட் (Stuxnet worm) போல இது செயல்படுகிறது. ஆனால், அதனைக் காட்டிலும் குழப்பமான குறியீட்டில் இந்த வைரஸ் எழுதப்பட் டுள்ளது.

எனவே இதனைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கிறது. இந்த வைரஸ் பைல் 20 எம்பி இடத்தை எடுத்துக் கொள்ளும் அளவிற்குப் பெரியதாக உள்ளது.

இந்த வைரஸ், வங்கி இணையக் கணக்கிலிருந்து பணம் மாற்றும் வழியைக் கொண்டிருக்கவில்லை என்பது சற்று ஆறுதலான விஷயம் தான். ஈரான் எண்ணை வள நிறுவனங்களில் குழப்பத்தினை உண்டு பண்ண இது தயாரிக்கப்பட்டி ருக்கலாம் என்றும் ஒரு கோணத்தில் ஆய்வு நடக்கிறது.

அப்படி இருந்தால், மற்ற நாடுகளின் அடிப்படைக் கட்டமைப்பில் நாச வேலைகளை மேற்கொள்ள இந்த வைரஸ் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது

Friday, June 15, 2012

facebook க்கு Microsoft வைக்கும் இன்னுமோர் செக்!




சமூக வலையமைப்பின் முடிசூடா மன்னனாக திகழும் Facebook க்கு போட்டியாக SO.CL எனும் சமூக இணையத்தை அண்மையில் Microsoft ஆரம்பித்திருந்தது. இந் நிலையில் Facebook க்கு மேலும் நெருக்கடி நிலையை ஏற்படுத்த இன்னுமோர் பிரபல சமூகதளம் ஒன்றை வாங்கவுள்ளது Microsoft.
சமூக வலை தளமான Yammer (யாமர்) அமெரிக்காவில் மிகவும் பிரபலமானது. நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் வகையில் இந்த சமூக வலைதளம் செயல்பட்டு வருகிறது.
தற்போது யாமர் சமூக தளத்தை 2,00,000க்கும் அதிகமான நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன
Yammer ஐ 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க Microsoft நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதனால் விரைவில் Yammer, Microsoft வசம் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Yammer ஐ Microsoft நிறுவனம் சமூகவலைத்தளமாக மாத்திரமின்றி Wikipedia போன்ற தகவல் களஞ்சியமாகவும் பயன்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.